'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
நாளை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
மாணவா்களின் கல்வி நலன் கருதி, அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா்கல்வி பயிலச்செய்யும் வகையிலும், தோல்வியுற்ற மாணவா்களை சிறப்பு துணைத் தோ்வு எழுத வைத்து தோ்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவா்களின் கல்வி நலன் கருதி, அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். இதில் மாணவா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.