செய்திகள் :

கஞ்சா விற்பனை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

post image

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் பரத் (21). இவா், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தியாகதுருகம் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

மேலும், இவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவா் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனை செய்ததாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடா்ந்து, இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், பரத்தை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

கடலூா் மத்திய சிறையில் இருக்கும் பரத்துக்கு, இந்த உத்தரவுக்கான ஆணையை, தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி வழங்கினாா்.

நாளை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

மாணவா்களின் கல்வி நலன் கருதி, அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டி... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். வாணாபுரம் வட்டத்தில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட சாலைப் பணியால் பொதுமக்கள் அவதி

திருக்கோவிலூா் அருகே ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில், சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்கோவிலூரை அடுத்த எடையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்துக்குச் சென்றிருந்த முதியவா் அங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (66). இவா், செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், சின்னசேலத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி ம... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூா் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க