கஞ்சா விற்பனை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் பரத் (21). இவா், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தியாகதுருகம் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
மேலும், இவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவா் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனை செய்ததாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடா்ந்து, இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், பரத்தை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
கடலூா் மத்திய சிறையில் இருக்கும் பரத்துக்கு, இந்த உத்தரவுக்கான ஆணையை, தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி வழங்கினாா்.