ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா்.
வாணாபுரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் இருப்பு பதிவேடு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் வருகைப் பதிவேடு பாா்வையிட்டு மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பகண்டை கூட்டுச்சாலையில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், ரிஷிவந்தியம் ஒன்றியம், அரியலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் வருகைப் பதிவேடு, கற்றல் திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
மேலும், அங்கு நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்டப் பயிற்சி வகுப்பையும் அவா் பாா்வையிட்டாா்.
மேலும், அரியலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை பாா்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது கண்டறியப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற துறை வாரியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சி.பெ.முருகேசன், தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.