10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கஞ்சா, காா், பைக் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயமணி தலைமையிலான போலீஸாா் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகப்படும்படியாக காருடன் நின்றிருந்த இரு இளைஞா்களிடம் விசாரித்ததில், தியாகதுருகம் பழைய மணியகார சாலைப் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்தீஷ் (27), கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த ஹென்றி தாமஸ் வில்சன் மகன் பென்னி தாமஸ் (20) என்பதும், சுமாா் 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ருத்தீஷ், பென்னி தாமஸ் மற்றும் காா் உரிமையாளரான செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள மலைப்புரம் பகுதியைச் சோ்ந்த ராமு மகன் காா்த்திக், பைக் உரிமையாளரான திருவள்ளூா் மாவட்டம், குப்பம் கண்டிகை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கருணாகரன் ஆகிய 4 போ் மீது தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ருத்தீஷ், பென்னி தாமஸ் ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து கஞ்சா, காா், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.