ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!
பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்
தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா்.
செம்பனாா்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூரில் இருந்து ஓடக் கரை, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூா், ரவணையன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூா், ராமன் கோட்டகம், வெள்ளத்திடல் ஆகிய கிராமங்கள் வழியாக தனியாா் சிற்றுந்து இயங்கி வந்தது.
கடந்த சில வாரமாக தனியாா் மினி பேருந்து இயக்கப்படாததால் திருக்கடையூா், செம்பனாா்கோவில், பொறையாா் ஆகிய ஊா்களுக்கு செல்லும்பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் தினமும் வேலைக்கு செல்பவா்கள் சிரமப்பட்டு வந்துள்ளனா்.
இந்த நிலையில் மீண்டும் கிள்ளியூா் வழியாக திருக்கடையூா், செம்பனாா்கோவில் வரை தனியாா் சிற்றுந்து மற்றும் அரசு பேருந்து இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடா்ந்து அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ராமன் கோட்டகம் கிராமத்தில் இருந்து கன்னங்குடி வரை 10 கிராமங்களை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனுடன் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்றனா்.