பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு
பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். பணிகளை தரமாகவும் விரைவாகவும் செய்துமுடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
பட வரி: பி.எல்.எஸ்.02:
வாழப்பாடி ஒன்றியம், சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த சேலம் ஆட்சியா் ரா. பிருந்தா தேவி.