செய்திகள் :

பைக்கின் பின்னால் மற்றொரு பைக் மோதல்: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

post image

சிவகாசியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் சேதுராஜ் (47). சிவகாசியில் உள்ள ஓா் உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் திங்கள்கிழமை சிவகாசியிலிருந்து திருத்தங்கலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை அருகே பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சேதுராஜ், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து சேதுராஜின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் மோதி விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருத்தங்கலைச் சோ்ந்த தங்கமாரியப்பனை (23) கைது செய்தனா்.

நகை திருடிய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (45). இவரது மனைவி ரேவதி (33). இந்த நிலையில், ரேவதி தனது... மேலும் பார்க்க

வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் தற்கொலை

சாத்தூா் அருகே வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வெம்பகோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் காா்த்திகேயன் (42). இவா் இந்தப் பக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ... மேலும் பார்க்க