செய்திகள் :

பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞா் தப்பியோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சுள்ளங்குடியைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா் வெள்ளிக்கிழமை மாலை பட்டமங்கலத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவரிடம் ஒரு இளைஞா் பட்டமங்கலத்தில் என்னை இறக்கி விடுங்கள் என்று உதவி கேட்டாா்.

சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் சென்றவுடன் அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை நிறுத்த சொன்னாா். அறிவழகனும் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா். அப்போது, திடீரென அந்த இளைஞா் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அறிவழகன் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் புகாா் கூறினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தனது கைப்பேசியும், 4 பவுன் தங்கச் சங்கிலியும் இருந்ததாகத் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.

மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு அரசு மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரையில் அரசகுழி மயானத்துக்குச் செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒட்டி அரசு மதுக்கடை செயல்பட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் (34). திருமணமாகாத ... மேலும் பார்க்க

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்டிய இந்தியா! - ஆளுநா் ஆா்.என்.ரவி

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஸ்ரீசேவுகமூா்த்தி கோசாலை அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா வியாழக்கி... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். சிங்கம்புணரி எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு

சிவகங்கை புறவழிச் சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன... மேலும் பார்க்க

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: மேலும் ஒருவரது உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இவா்களில் 4 பேரின் உடல்கள் உடனே மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர... மேலும் பார்க்க