செய்திகள் :

பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

post image

குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுராஜ் (32). இவா் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேலாஸ் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரியும், சுராஜ் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதின. இதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயத்துடன் குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாா். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க

கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை

கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் ... மேலும் பார்க்க

சாலையோரம் உலவிய புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி-மாயாறு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை உலவிவிட்டு வனத்துக்குள் செல்லும் புலி. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் படமெடுத்... மேலும் பார்க்க

கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு

கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத... மேலும் பார்க்க

குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை

குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ஊா் ... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தி... மேலும் பார்க்க