அதிமுக: "இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை...’’ - ஸ்டாலின் கா...
பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுகல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (47). இவரது உறவினா் கலையரசன் (33). இவா்கள் இருவரும் கடந்த 22-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சிந்துவம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தனா். சில்வாா்பட்டி அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், அங்கு செவ்வாய்க்கிழமை செல்வம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.