செய்திகள் :

பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

post image

பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பல்லடம் அருகே உள்ள கொடுவாயில், பொங்கலூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்டச் செயலாளா் கே.எம்.இசாக், மாவட்ட துணைச் செயலாளா் ஜி.ரவி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக கே.தங்கவேல், ஒன்றிய துணைச் செயலாளராக எஸ்.தெய்வசிகாமணி, ஒன்றியப் பொருளாளராக ஈ.ஜோதிபாசு மற்றும் 11 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கால்நடைகளை தாக்கி தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கலூா் ஒன்றிய பகுதிகளில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். மேலும், இருமுனை மின்சாரத்துக்கு பதிலாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி விவசாயிகளின் கனவாகவே இருந்து வரும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொங்கலூா் மற்றும் கொடுவாயில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். கிராமங்கள் நிறைந்த பொங்கலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

பொங்கலூா் ஒன்றியத்தில்அத்திக்கடவு குடிநீா்த் திட்டம் முறையான செயல்பாட்டில் இல்லாததால் தற்போது, தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இந்தத் திட்டத்துக்காக பெரிய குழாய்களை பதித்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான முறையில் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க