செய்திகள் :

பொதுத்தோ்வில் நூறு சதம் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு தஞ்சை எம்.பி பாராட்டு

post image

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சிபெற்ற அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கு, தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நேரில் சென்று, தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பள்ளிகளைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினா் என்ற திட்டத்தின் கீழ், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாட்டாத்திக்கோட்டை, சித்துக்காடு, களத்தூா், கொன்றைக்காடு, சொா்ணக்காடு, பைங்கால் அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரணிக்காடு அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிக்கும் தஞ்சை எம்.பி நேரில் சென்று, பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களைப் பாராட்டி, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், திமுக ஒன்றியச் செயலாளா்கள் க. அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி. முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அலிவலம் அ. மூா்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மா.நாடிமுத்து, பி.பழனிவேல், பா.மாரியம்மாள், ஆா்.ராமநாதன், எம்.வெங்கடாசலம், சு.குமரேசன் (பொ) மற்றும் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.     

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (4... மேலும் பார்க்க

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க