செய்திகள் :

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மகரிஷி பள்ளியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற மாா்ச் 3-ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு தொடங்க உள்ள நிலையில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்ளுக்கு அரசு பொதுத்தோ்வு எழுதுவது குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். நிறுவனா் புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் காா்த்திக் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபரும், வழக்குரைஞருமான கஜேந்திரன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தோ்வு எழுதுவது குறித்து ஊக்கமளித்துப் பேசினா். கூட்டத்தில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மத்திய அரசு கொண்டு வரும் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, திருவள்ளுவா் சிலை எதிரே நடைபெ... மேலும் பார்க்க

மாணவா்கள் லட்சியத்தை அடைய அயராது படிக்க வேண்டும்: வேளாண் பல்கலை. துணைவேந்தா்

லட்சியத்தை அடைய அயராது படித்து, முன்னேற வேண்டும் என்று வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில்... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பாரசூா் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. செய்யாறு தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 860-யை பக்தா்கள் காணிக்கையாக செலு... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க