செய்திகள் :

பொதுப்பணித்துறை நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

post image

பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொதுப்பணித் துறை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை இந்திய கட்டுநா் சங்க காரைக்கால் மைய தலைவா் இளம்பருதி, செயலாளா் எஸ்.எஸ். சுப்பிரமணியராஜூ, பொருளாளா் இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து சங்கத்தினா் கூறியது: தோ்தல் காலத்தில் காரைக்காலில் பல்வேறு பணிகள் நடைபெற்றன. மத்திய அரசின் ஜல் ஜீவன் கிராமப்புற குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகள் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.

இந்தப் பணிகளை ஒப்பந்த முறையில் ஏற்று செய்து முடித்து பல மாதங்களாகியும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தொகையை முழுமையாக விடுவிக்கவில்லை. பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஒப்பந்ததாரா்கள் கடன் பெற்று பணிகளை செய்து முடித்தனா். எனவே காலம் கடத்தாமல், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை அரசுத் துறை விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க