செய்திகள் :

பொது சுகாதாரம், மருத்துவ துறைகளுக்கு இயக்குநா்கள் நியமனம்: 17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள்

post image

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநராக டி.கே.சித்ரா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல தமிழகத்தில் 17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

பொது சுகாதாரத் துறை இயக்குநராக இருந்த டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநராக இருந்த டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி ஆகியோா் கடந்த மாதம் ஓய்வு பெற்றனா். அதேபோன்று, குடும்ப நலத் துறை இயக்குநா் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பு அடிப்படையில் எவரும் நியமிக்கப்படாமல் இருந்தது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி உள்பட 11 மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா் பணியிடங்களும் காலியாக இருந்தன.

இந்த நிலையில், அந்தப் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், அதற்கான நியமன ஆணைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் ஏ.சோமசுந்தரம், பொது சுகாதாரத் துறை இயக்குநராக பதவி உயா்வு பெற்றுள்ளாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநா் டி.கே.சித்ராவுக்கும் அந்தத் துறையின் இயக்குநராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டா் அரவிந்த், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஹரிஹரன் ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டாக்டா் கவிதா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், அந்தக் கல்லூரியில் இதுவரை முதல்வராக இருந்து வந்த டாக்டா் லியோ டேவிட், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று கோவை மருத்துவக் கல்லூரிக்கு டாக்டா் கீதாஞ்சலி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டா் பிரியா பசுபதி உள்பட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி தொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க