செய்திகள் :

பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

post image

பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு சிறப்பு  வழிபாடு  நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில்,வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவேனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சனிப்பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கந்தா்வக்கோட்டை: அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா். வட்டாட்சி... மேலும் பார்க்க

புதுகையில் களைகட்டிய கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுகை நகரிலுள்ள கடைவீதிகளில் திங்கள்கிழமை பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனா். புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைந்த கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. புது... மேலும் பார்க்க

கொடும்பாலூரில் 1.80 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கும் விடுதி; காணொளியில் முதல்வா் திறந்து வைத்தாா்!

விராலிமலை அருகே அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவா்கள் தங்கும் விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். விராலிமலை அடுத... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் மனைவியிடம் 13 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியிடம் 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். புதுக்கோட்டை காமராஜபுரம் 33-ஆம் வீதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீ... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா

கந்தா்வகோட்டை தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில், எம்எல்ஏ மா. சின்னதுரை திங்கள்கிழமை பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினா். நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினா், மகளிா் மற்றும் பொதுமக்க... மேலும் பார்க்க

களைகட்டிய கரும்பு விற்பனை

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பொங்கல் பண்டிகையை யொட்டி திங்கள்கிழமை கரும்பு விற்பனை களைகட்டியது. மேலும் பார்க்க