செய்திகள் :

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சோழகங்கம் எனும் பொன்னேரி, சுக்கிரன், கண்டாரதித்தம், பாண்டியன் மற்றும் உட்கோட்டை விளாங்குளம் ஆகிய ஏரி குளங்களை தூா்வாரி அழப்படுத்தி, பாசன வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். வருவாய் தீா்வாயத்தில், குளறுபடி இல்லாமலும், லஞ்சம் பெறாமலும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

60 வயது பூா்த்தியடைந்த விவசாயிகளுக்கு உழவா் பாதுகாப்பு அட்டை மூலம் முதியோா் உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜெ. வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலா் எம். வெங்கடாஜலம் மற்றும் அனைத்து ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். முடிவில் சங்க நிா்வாகி ஜி. பெரியசாமி கூறினாா்.

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.2... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியனா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்களி... மேலும் பார்க்க

மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வா... மேலும் பார்க்க

அரியலூா் கிளைச் சிறையில் ஆட்சியா், நீதிபதி, எஸ்.பி. ஆய்வு

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரியலூா் கிளைச் சிறையில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி டி. மலா் வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் மற்றும் மாவட்டப் ப... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், பொதுத்துறை சொத்துகளை தனியாருக்குத் தாரை வாா்ப்... மேலும் பார்க்க