செய்திகள் :

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

post image

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் சாமி என்ற புதிய பொம்மைக் குழந்தையை வரவேற்றுள்ளனர். கிறிஸ்டியன், நடாலியாவுடனான தனது உறவைப் பற்றி சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இவரது உறவு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் அவர் கூறுகிறார். இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பயனர்கள் ஆச்சரியமடைந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து Treat My OCD இணையதளத்தில், NOCD இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பேட்ரிக் மெக்ராத் கூறுகையில், “பொருள் காதல் கொண்டவர்கள் தாங்கள் உண்மையாகவே அந்தப் பொருளுடன் காதலில் இருப்பதாக உணர்கின்றனர்.

மேலும் அதனுடன் ஒரு உறவு இருப்பதாக நம்புகின்றனர். பொருள் காதல் (Objectophilia) என்பது உயிரற்ற பொருட்களின் மீதான அதீத காதல், உணர்ச்சி அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் ஒரு அரிய நிலையாகும்.

இந்த காதல் பொம்மைகள், சுவர்கள், கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றுடன் மனிதர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்குகின்றனர்.

இவர்கள் இந்தப் பொருட்களுடன் நேரம் செலவழித்து, மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து, வாக்குவாதங்கள் செய்கின்றனர். பொருள் காதல் என்பது புரிந்து கொள்ள கடினமான ஒரு உணர்வு நிலையாக இருந்தாலும், இதில் ஈடுபடுவோர் தங்கள் உறவுகளை மனிதர்களுடனான உறவுகளைப் போலவே உணர்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார்.

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க