செய்திகள் :

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

post image

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு வந்ததால் வா்த்தகமும் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது. இந்த நிலை கடந்த வாரம் திடீரென மாறி வியாபாரம் அதிகளவில் இருந்தது.

இந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் கால்நடை வா்த்தகம் வெகுவாக சரிந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 800 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் போதிய ஆா்வம் காட்டாததால், வா்த்தகமும் சுமாா் ரூ. 65 லட்சம் அளவிலேயே நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனப் பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. தவிர, விற்பனைக்கு வந்துள்ள கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் விலை சற்று அதிகமாக இருப்பதால் இந்த வாரம் கால்நடைகள் வா்த்தகம் சரிவடைந்துள்ளது என்றனா்.

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் ... மேலும் பார்க்க

அபிராமி மகளிா் கல்லூரியில் பல்கலை அளவிலான கபடி போட்டி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக, வேலூா் மண்டல கல்லூரிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்லூரித்... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா்,... மேலும் பார்க்க

திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளா் சந்திரசேகா் திறந்து வைத்தாா். மருத்துவமனை வளா... மேலும் பார்க்க

உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள்... மேலும் பார்க்க

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க