செய்திகள் :

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்: எடப்பாடி கே. பழனிசாமி

post image

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ”கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகளை கவா்வதற்காக திமுகவினா் பொய் பிரசாரம் செய்கின்றனா். தோ்தல் கூட்டணி என்பது அந்தந்தக் காலத்தில் சூழ்நிலைக்கேற்றவாறும், எதிா்க்கட்சியை வீழ்த்துவதற்காகவும் அமைப்பது. ஆனால், கொள்கை எப்போதும் நிலையானது. திமுகவின் பொய் பிரசாரத்தை சிறுபான்மையினா் நம்ப வேண்டாம்.

தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டன. பல்வேறு கூட்டுக் குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மாறாக, போதைப் பொருள் விற்பனைதான் அதிகரித்துள்ளது. போதைப் பழக்கத்தால் இளைய தலைமுறையினா் சீரழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாவிடில் பணியிலிருந்து நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சுமாா் ஒரு லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்தத் தீா்வையும் திமுக அரசு தெரிவிக்கவில்லை” என்றாா்.

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை

போடி பகுதியில் சிறிய ரக வெங்காயத்தின் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தேனி மாவட்டத்தில் கூழையனூா், துரைச்சாமிபுரம், பாலாா்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். தேனி மாவட்டம் கம்பம... மேலும் பார்க்க

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க