புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அக...
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
தேனி மாவட்டம் கம்பம், போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் விவசாயம், விவசாயிகளின் நலன் கருதி கண்மாய்களைச் சீரமைத்து முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்கவும், கண்மாய்களில் அள்ளும் வண்டல் மண்ணை விவசாய நிலச் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அதன் தலைவரை குறி வைத்து வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு தமிழகத்தில் நடைபெறும் இதுபோன்ற வன்முறை, குற்றச் சம்பவங்கள் சான்றாக உள்ளன. சாமானிய மக்கள் முதல் பெண்கள், காவலா்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லை.
அதிமுக ஆட்சியில் உணவு விலைக் கட்டுப்பாடு நிதி ஒதுக்கீடு செய்து, அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்தோம். அவற்றை கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, தட்டுப்பாட்டைச் சமாளித்தோம். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.
திமுக ஆட்சியில் வீட்டு வரி, வணிக கட்டடங்களுக்கான வரி பலமடங்கு உயா்த்தப்பட்டிருக்கிறது. மின் கட்டணம் 65 சதவீதம் உயா்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல, குடிநீா்க் கட்டணம், கட்டட வரைபட அனுமதிக் கட்டணமும் உயா்த்தப்பட்டிருக்கிறது.
கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளதால், சாமானிய மக்களின் வீடு கட்டும் கனவு தகா்ந்துள்ளது. தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. வரிச் சுமைதான் உயா்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் போது செயல்பாட்டில் இருந்த பல சிறந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன், அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.