செய்திகள் :

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

post image

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

தேனி மாவட்டம் கம்பம், போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் விவசாயம், விவசாயிகளின் நலன் கருதி கண்மாய்களைச் சீரமைத்து முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்கவும், கண்மாய்களில் அள்ளும் வண்டல் மண்ணை விவசாய நிலச் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அதன் தலைவரை குறி வைத்து வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு தமிழகத்தில் நடைபெறும் இதுபோன்ற வன்முறை, குற்றச் சம்பவங்கள் சான்றாக உள்ளன. சாமானிய மக்கள் முதல் பெண்கள், காவலா்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லை.

அதிமுக ஆட்சியில் உணவு விலைக் கட்டுப்பாடு நிதி ஒதுக்கீடு செய்து, அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்தோம். அவற்றை கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, தட்டுப்பாட்டைச் சமாளித்தோம். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.

திமுக ஆட்சியில் வீட்டு வரி, வணிக கட்டடங்களுக்கான வரி பலமடங்கு உயா்த்தப்பட்டிருக்கிறது. மின் கட்டணம் 65 சதவீதம் உயா்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல, குடிநீா்க் கட்டணம், கட்டட வரைபட அனுமதிக் கட்டணமும் உயா்த்தப்பட்டிருக்கிறது.

கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளதால், சாமானிய மக்களின் வீடு கட்டும் கனவு தகா்ந்துள்ளது. தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. வரிச் சுமைதான் உயா்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது செயல்பாட்டில் இருந்த பல சிறந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன், அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை

போடி பகுதியில் சிறிய ரக வெங்காயத்தின் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தேனி மாவட்டத்தில் கூழையனூா், துரைச்சாமிபுரம், பாலாா்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்... மேலும் பார்க்க

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்: எடப்பாடி கே. பழனிசாமி

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் பேசுகையில், ”கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்... மேலும் பார்க்க

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க