செய்திகள் :

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை

post image

போடி பகுதியில் சிறிய ரக வெங்காயத்தின் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் கூழையனூா், துரைச்சாமிபுரம், பாலாா்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 600 ஏக்கருக்கும் அதிகமாக சிறிய ரக வெங்காய விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் விளையும் வெங்காயம் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வளா்க்கப்படுவதால், அதன் மருத்துவ குணம் காரணமாக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரை, ஒட்டன்சத்திரம், நாமக்கல், திருச்சி சந்தைகளுக்காக மொத்தமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விளைச்சல் குறையும்போது விலை அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டு வெங்காய விளைச்சல் குறைந்த நிலையில், விலையும் குறைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக சிறிய ரக வெங்காயங்கள் அவற்றின் ரகம், ஈரத்தன்மையைப் பொருத்து விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை, சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகின்றன.

வெங்காய விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் களை பறிப்பு கூலி, உரம், மருந்து தெளிக்கும் செலவு, வேலை ஆள்கள் செலவு, போக்குவரத்துச் செலவு போன்றவை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கடந்த மூன்று மாதங்களாக வெங்காய விலை உயராத காரணத்தால் இருப்பு வைக்கவும் விவசாயிகள் தயங்குகின்றனா். மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும், மருத்துவத் தேவைக்கும் உகந்த வெங்காயத்துக்கும் நெல், கரும்பு போல குறைந்தபட்ச விலையை நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். தேனி மாவட்டம் கம்பம... மேலும் பார்க்க

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்: எடப்பாடி கே. பழனிசாமி

பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் பேசுகையில், ”கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்... மேலும் பார்க்க

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க