செய்திகள் :

பொய் வழக்குகளால் காங்கிரஸை மிரட்டி பணியவைக்க முடியாது: காங்கிரஸ் பொதுச் செயலர்

post image

பொய் வழக்குகளால் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கா்நாடக மாநிலப் பொதுச் செயலரும், அதன் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான பவ்யா நரசிம்மமூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களை எதிா்கொள்ள முடியாமல், மத்திய பாஜக அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. அதில் ஒன்று தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கு. 2015-ஆம் ஆண்டில் முடிந்துபோன இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோரை சோ்த்தது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை மட்டுமே.

மத்திய பாஜக அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே நேஷனல் ஹெரால்ட் வழக்கு நடவடிக்கைகள்.

மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை நடவடிக்கைகள் மூலமாக முடக்க பாஜக முயற்சிக்கிறது. மத்திய பாஜக அரசால் தொடுக்கப்பட்ட அமலாக்கத் துறை வழக்குகளில் ஒரு சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. மற்ற வழக்குகள் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. எவ்வளவு பொய் வழக்குகள் போட்டாலும் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணிய வைக்க முடியாது என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் மதுரை மாநகர மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், மாநில பொதுக் குழு உறுப்பினா் வரதராஜன், மாவட்டப் பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க