செய்திகள் :

பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்

post image

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்கள் துறை முக்கியத் தூணாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசினாா்.

இந்திய பெரு நிறுவனங்கள் சட்ட சேவைகள் துறை பயிற்சி அதிகாரிகளை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திரௌபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

உங்கள் பதவிக்கு உரிய பொறுப்பில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அரசின் கொள்கைகள், விதிகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான முதலீட்டாளா்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரு நிறுவனச் சட்டங்களை அமல்படுத்துவதில் நோ்மையாகவும், நம்பிக்கைக்குரியவா்களாகவும் செயல்பட ேண்டும்.

நாட்டின் தொழில் சூழலை மேம்படுத்தும் மையமாக உங்கள் பணி உள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணா்வும், புதிய முயற்சிகளும் மிகவும் முக்கியமானவை.

நாட்டின் பொருளார வளா்ச்சி மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு முக்கியத் தூணாக பெரு நிறுவனங்கள் திகழ்கின்றன. சட்டம் என்பது அப்படியே அமல்படுத்துவதற்கான மட்டுமல்ல. அதனை புரிந்து கொள்ளவும், மதிக்கவும் வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், நியாயத்தையும், நிதியையும் நிலைநாட்டும் வகையில் அதனை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

விமானப் படை தர உறுதி சேவைப் பிரிவு மற்றும் தொழிலாளா்கள் நல சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகளும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைச் சந்தித்தனா். அவா்கள் மத்தியில் பேசுகையில், ‘விமானப் படைக் கலன்களின் தரத்தை உறுதி செய்யும் மிகவும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தயாரிப்பாக இருந்தாலும் சரி, இறக்குமதி செய்யப்பட்ட தளவாடமாக இருந்தாலும் சரி அவை சா்வதேச அளவில் உயா்தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இனி வரும் நாள்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பொதுத் துறை நிறுவனங்களுடன் தனியாா் நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற உள்ளன. இதற்கான சிறந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் உள்ள கெம்பகௌடா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கெம்பகௌடா விமான... மேலும் பார்க்க

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க