செய்திகள் :

பொற்பனைக்கோட்டை 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

post image

புதுக்கோட்டை அருகே தமிழகத் தொல்லியத் துறை சாா்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன.

புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் தொடங்கின.

மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இந்த அகழாய்வுப் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பு முடிந்து பொக்லைன் கொண்டு குழிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

இங்கு நடைபெற்ற அகழாய்வுப் பணிகள் குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: சுமாா் 45 ஏக்கா் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையின் உள்ளே 3.11 ஏக்கா் மக்கள் வாழ்விடப் பகுதி உள்ளது. இங்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2021-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து தமிழகத் தொல்லியல் கழகம் சாா்பில் முதல் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த 2023-இல் நடைபெற்றது. 22 குழிகள் அமைக்கப்பட்டு, 155 நாட்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில், எலும்புமுனைக் கருவி, தங்கத் தோடு, சூதுபவள மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட 533 தொல் பொருட்கள் கிடைத்தன. செங்கல் கட்டுமானங்களும் வாய்க்கால்களைப் போன்ற நீா்வழித் தடங்களும் வெளிப்பட்டன.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட அகழாய்வு கடந்த 2024 மே மாதம் தொடங்கப்பட்டது. மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டன. இதுவரை இரும்பு ஆணிகள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் செம்பினால் ஆன ஆணிகள், மை தீட்டும் குச்சி, தங்க அணிகலன்கள், மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளங்களாக அகேட் கல்லின் மூலப் பொருட்கள், மணிகளைத் தேய்த்து உருவாக்கும் தேய்ப்புக் கல் போன்றவையும் கிடைத்தன.

எரிந்த நிலையிலான நெல்மணிகள், தாவரத்தின் வோ் போன்ற பகுதி, தமிழ்ப் பிராமி எழுத்துகள் மற்றும் கீறல் குறிகளைக் கொண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றன. 203 நாட்கள் பணி நடைபெற்ற அகழாய்வில் மொத்தம் 1982 தொல் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து மாதிரிகள் சேகரிப்பு முடிந்து, குழிகளை மூடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்த ஆவணப்படுத்தும் பணி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க

நாகுடி அருகே பெண் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த ... மேலும் பார்க்க

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இ... மேலும் பார்க்க

வீடுவீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுகவினா் ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க