செய்திகள் :

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்திவிட்டு, திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். நிரந்தர ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதியம் மற்றும் சலுகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனா். காரைக்காலில் நடைபெறும் போராட்டத்தில் நடத்துநா், ஓட்டுநா் உள்பட 90 போ் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்காலில் இருந்து பிஆா்டிசி பேருந்துகள் திருச்சி, கோவை, சென்னை, திருச்செந்தூா், புதுச்சேரி மற்றும் மாவட்ட அளவில் என 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூருக்கு அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது. பின்னா் இது நீட்டிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக இதுவும் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

காரைக்காலில் இருந்து தினமும் அதிகாலையில் புதுச்சேரி செல்லும் பேருந்து, குறுகிய நேரத்தில் அதிக இடங்கள் நிற்காமல் செல்வது பயணிகளிடையே வரவேற்பை பெற்ற நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக இப்பேருந்து இயக்கப்படாததால் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் த... மேலும் பார்க்க

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க