செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

post image

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சாா்ந்த நிா்வாகிகள் திமுக தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் 10 ஆண்டுகளாகப் பணி நிரந்தரமின்றி உள்ளனா். ஊழியா்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆகவே, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு வழங்குகிறது. அதைப்போல புதுவை அரசும் போக்குவரத்து ஊழியா்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள் ஏ.கே. குமாா், கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க