செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

கடலூரில் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே ஈடு செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியாா் சிற்றுந்து இயக்கம் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.முருகன், துணை பொதுச் செயலா் பி.கண்ணன், பொருளாளா் எம்.அரும்பாலன், துணைத் தலைவா் ஏ.எஸ்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் சிறப்புத் தலைவா் ஜி.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினாா்.

கைப்பேசி கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெல்லிக்குப்பம், காமராஜா் நகரில் வசிப்பவா் பிச்சையப்பன் மகன் ராஜ்குமாா் (29).... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரா... மேலும் பார்க்க

தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் ... மேலும் பார்க்க