செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

post image

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.

பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் நல்லதுரை (22). இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு பெரம்பலூரில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றபோது, பெரம்பலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகியுள்ளாா். இந்நிலையில், கடந்த 18.4.2016-இல் அச் சிறுமியை கடத்திச் சென்ற நல்லதுரை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மருவத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்து நல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், கடத்திச்சென்ற சிறுமியை மீட்ட போலீஸாா் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இவ்வழக்கு, பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா். இவ் வழக்கை புதன்கிழமை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, சிறுமியை கடத்திச் சென்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நல்லதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால், மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, போலீஸாா் நல்லதுரையை அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது: 25 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 6,500 மாணவா்களுக்கு வினா- விடை தொகுப்பு!

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ‘தோ்வை வெல்வோம்’ எனும் தலைப்பிலான வழிகாட்டி வினா - விடை தொகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

புதிய அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: இயக்குநா்

புதிய நில அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நில அளவ... மேலும் பார்க்க

குரும்பலூா் அரசுப் பள்ளி ஆண்டு விழா!

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் அ. பூங்கோதை தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கு. ரம்யா, துணைத்... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா், பாதிக்கப்பட்ட மக்காசோளப் பய... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க