செய்திகள் :

போக்சோ வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் முருகேசன் (63). கோரை பாய் வியாபாரம் செய்து வரும் இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க

தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரித்து அதில... மேலும் பார்க்க

புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள... மேலும் பார்க்க