செய்திகள் :

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

post image

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்கு பிரபலமானவர்.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இசைச் கச்சேரி நடத்தியுள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது.

ஜான் ஜெபராஜின் மாமனார் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஜெபராஜ் கடந்த 2024 மே 21-ம் தேதி தன் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஜெபராஜின் மாமனார் அதற்கு அந்த 17 வயது சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு

மேலும் அந்த சிறுமியின் தோழியான 14 வயது சிறுமி ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மதபோதகர் ஜெபராஜ் இரண்டு சிறுமிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பயந்து போன சிறுமிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த பாலியல் தொல்லை குறித்து சிறுமிகள் உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர்களின் நடவடிக்கையை பார்த்து உறவினர் ஒருவர் பேசியபோது அதில் ஒரு சிறுமி பாலியல் சீண்டல் குறித்து கூறியுள்ளார். அவர்கள் மூலம் இந்த தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டது.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் (மத்திய) காவல்நிலையத்தில் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜெபராஜை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.  

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி

நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெ... மேலும் பார்க்க