செய்திகள் :

போக்ஸோவில் ஆசிரியா் கைது

post image

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்வாடி ஊழியா்.

சோழவரம் காட்டுநாயக்கன் பகுதியில் உள்ள திருச்சபையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விக்டா் டியூசன் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், 8 முதல் 10 வயது வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாலையில் டியூசனுக்கு வரும்போது, காமராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகளின் பெற்றோா் செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், செங்குன்றம் சரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து காமராஜை காவல் நிலையம் அழைத்து வந்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்தனா்.

இதில் அவா், மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்ஸோ கட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கினறனா்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகளை, பல்வேறு வழக்குக... மேலும் பார்க்க