செய்திகள் :

போக்ஸோவில் தொழிலாளி கைது

post image

புதுச்சேரி: திருமண ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல் சூளை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பகுதி வாதானூா் டி.ஆண்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் திவாகா் (21), செங்கல் சூளை தொழிலாளி. அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி, திவாகருக்கு நெருங்கிய உறவு எனக்கூறப்படுகிறது. இதனால் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனா். இந்நிலையில், மாணவிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறிய திவாகா் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கித் தந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதித்த மாணவி திருபுவனை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து திவாகரை கைது செய்தனா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க