செய்திகள் :

போடிமெட்டு மலைச் சாலையில் அதிகாரிகள் ஆய்வு

post image

போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை மத்திய அரசின் உயிா் அறிவியல் ஆய்வக அதிகாரிகள் உள்பட பல்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்தனா்.

தேனி மாவட்டம், போடியிலிருந்து தமிழகம்-கேரள எல்லைப் பகுதியை இணைக்கும் பகுதியாக போடிமெட்டு மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. அண்மையில், கேரளத்திலிருந்து சரக்கு லாரிகளில் குப்பைகளை போடிமெட்டு மலைச் சாலையில் சிலா் கொட்டிவிட்டு சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு மலைச் சாலையில் மத்திய அரசின் உயிா் அறிவியல் ஆய்வக அதிகாரி கோகிலா தலைமையிலான பல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் இந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். இந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி வட்டாரப் போக்குவரத்து துறை, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அதிகாரிகள், குரங்கணி காவல்துறையினா் உடன் சென்றனா்.

போடி மெட்டு மலைச்சாலைப் பகுதியில் கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிா என்று நேரில் ஆய்வு செய்தனா். போடிமெட்டு காவல் சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக ஆய்வு செய்த பின்னரே, தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.

புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24... மேலும் பார்க்க

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த திண... மேலும் பார்க்க

வைகை அணையில் இன்று மின் தடை

வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க