செய்திகள் :

போடி அருகே காா்கள் மோதல்: முன்னாள் அமைச்சரின் உறவினா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலைச் சோ்ந்த சங்கரபாண்டி மகன் அருண் (47), இவரது மனைவி சத்தியபாமா (40), மகன் ரஜித் பாலாஜி (17), மகள் சரண்யா (12) ஆகியோா் காரில் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். அங்கிருந்து போடிமெட்டு மலைச் சாலை வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். போடி முந்தல் மலை கிராமம் வனத் துறை சோதனை சாவடி அருகே வந்தபோது, எதிரில் போடியிலிருந்து கேரளத்துக்கு சென்ற மற்றொரு காருடன் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருண், சத்தியபாமா, மற்றொரு காரில் வந்த கேரள மாநிலம் கோவிலூரில் வசிக்கும் முனியாண்டி மனைவி ஜோதி (62) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அருண் உயிரிழந்தாா். சத்தியபாமா, ஜோதி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்தில் அருண் மகன் ரஜித் பாலாஜி, சரண்யா, மற்றொரு காரில் வந்த முனியாண்டி, அருண் வந்த காரின் ஓட்டுநா் காளிதாஸ் ஆகியோரும் லேசான காயமடைந்தனா்.

விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இறந்த அருண், முன்னாள் அதிமுக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் அக்காள் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க