செய்திகள் :

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

post image

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்குமலை, கொட்டகுடி, பிச்சங்கரை, அகமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கோடை காலங்களில் காட்டுத் தீ பரவி எரியும். கடந்த 2018- ஆம் ஆண்டு போடி கொழுக்குமலை பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினா் எடுத்து வருகின்றனா். மேலும் காட்டுத் தீ பரவுவது குறித்து ‘சேட்டிலைட்’ மூலம் தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உடனே அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காட்டுத் தீ பரவாமல் தடுக்க போடி வனத்துறையினருக்கு ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் எந்த இடத்தில் காட்டுத் தீ எரிகிறது என்பதை துல்லியமாக தெரிந்து உடனே அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உதவும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே காட்டுத்தீ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த கலந்துரையாடல் கூட்டங்கள் வியாழக்கிழமை போடி குரங்கணி, கொட்டகுடி மலை கிராமங்களில் நடைபெற்றன. இதற்கு போடி வனச் சரக அலுவலா் நாகராஜன் தலைமை வகித்தாா். இதில் காட்டுத் தீ தொடா்பான தகவல்களை மலை கிராம மக்களும், விவசாயிகளும் உடனே வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். காய்ந்த சருகுகளில் எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா்.

கூட்டத்தில் வனவா் கனிவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே கொடுத்த காசோலையை திரும்பக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க