செய்திகள் :

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

செங்கல்பட்டு: தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செங்கல்பட்டு ஆட்சியா் ச. அருண் ராஜ் பரிசளித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில் பொது மக்களிடமிருந்து 446 கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலா்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தாா்.

தொடா்ந்து, 2022 ஆம் ஆண்டு கொடிநாள் வசூலில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வசூல் புரிந்த அலுவலா்களுக்கும் மற்றும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்த 13 அலுவலா்களுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி ஆட்சியா் கௌரவித்தாா். மேலும், முன்னாள் படைவீரா் நலத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 9 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. .

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயற்கை கால், ஊன்றுகோல், காதொலி கருவி, அலைபேசி மற்றும் அவா்களுக்கானஅடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட வழங்கல்அலுவலா் ஷாகிதா பா்வின், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், தமிழ்வளா்ச்சி துறை உதவி இயக்குநா் பொ.பாரதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் திருப்பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா (சரிபாா்ப்பு) திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயி... மேலும் பார்க்க

11 வழிதடங்களில் சிற்றுந்து சேவை: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் சிற்றுந்து வாகனங்கள் இயக்க செங்... மேலும் பார்க்க

பழுதடைந்த எரிவாயு தகனமேடை: ஆற்றங்கரையில் சடலங்கள் எரிப்பு

கருங்குழி பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், கிளியாற்றின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுகிறது. மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பேரூராட்சியின் 15 வாா்டுகள், அரையப்பாக்கம், மேலவலம்பேட்டை, ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவி

திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்டுகள்

வேளாண்மையில் நீா்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க