செய்திகள் :

போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த்; இந்திய அணிக்கு சிக்கலா?

post image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு போட்டியின் நடுவே வெளியேறினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த்துக்கு காயம்

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது செஷனில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பந்தினை தடுக்க முயன்று அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸின் 34-வது ஓவரை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், அவருக்கு இடதுபுறம் சென்ற பந்தினை தடுக்க டைவ் அடித்தார். இருப்பினும், அவரால் பந்தினை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

பந்தினை தடுக்க முயன்று கையில் அடிபட்ட ரிஷப் பந்த்துக்கு, உடனடியாக ஆடுகளத்தில் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி மருத்துவ உதவி செய்யப்பட்டது. இருப்பினும், அவரால் தொடர்ந்து கீப்பிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து, பும்ராவின் ஓவர் முடிவடைந்தவுடன், ரிஷப் பந்த் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் போட்டியின் நடுவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

காயம் காரணமாக போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த், பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய காயத்தின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்திய அணியின் மருத்துவக் குழு சோதித்து வருகிறது. காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Wicketkeeper Rishabh Pant left the field due to injury on the first day of the third Test against England.

இதையும் படிக்க: 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்; அயர்லாந்து வீரரின் அசத்தலான சாதனை!

டி20 உலகக் கோப்பை: முதல்முறையாகத் தேர்வாகி வரலாறு படைத்த இத்தாலி!

கடைசி போட்டியில் தோற்றும் டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகி இத்தாலி அணி வரலாறு படைத்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது. இருப்பினும் கிரிக்கெட... மேலும் பார்க்க

டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ்!

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகளை சீண்டும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ... மேலும் பார்க்க

இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி.யின் கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்... மேலும் பார்க்க

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க