செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது

post image

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலமாக சிலா் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால் அவா்களிடம் சோதனை நடத்தியதில் 600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா்கள் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22), சரண் (21) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ஊசி மூலமாக போதைக்காக உடலில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 600 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க