செய்திகள் :

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

post image

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நம்ரதாவிற்கு போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக பாலகிருஷ்ணா என்பவர் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி, போதைப்பொருளை டாக்டர் நம்ரதாவிற்கு டெலிவரி செய்த பாலகிருஷ்ணாவை கைது செய்தனர். டாக்டரிடமிருந்து 53 கிராம் கொகைன் போதைப்பொருள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் நம்ரதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் மும்பையை சேர்ந்த வன்ஸ் தக்கர் என்பவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் கொகைன் போதைப்பொருளை ஆர்டர் செய்திருந்தது தெரிய வந்தது.

போதை பொருள்

அதற்கான பணம் ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்து இருந்தார். இதையடுத்து வன்ஸ் போதைப்பொருளை கூரியர் மூலம் அனுப்பி இருந்தார். அதனை பாலகிருஷ்ணா டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்தபோது பிடிபட்டார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் நம்ரதா போதைப்பொருளுக்காக ரூ.70 லட்சத்தை செலவு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

நம்ரதா மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போதைப்பொருளை சப்ளை செய்த மும்பையை சேர்ந்த வன்ஸ் என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கூரியர் மூலம் கடத்தி வரப்படுவது அதிகரித்து இருக்கிறது.

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க

பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யார... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுர... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல்போன 107 கிராம் தங்கம் - கண்டுபிடித்தது எப்படி?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட பழமையான பொக்கிஷங்கள் உள்ளன. எனவே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மளிகைக் கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்க... மேலும் பார்க்க