பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை! - ரயில்வே இணை அமைச்சர்
போதைப்பொருள் ஒழிப்பு தினம் அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி
உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட காவல் காண்காணிப்பாளா் தீபக்சிவாச் முன்னிலை வகித்தாா்.
பேரணியானது, தேரடி, சத்திரம், மாதாகோயில் வழியாகச் சென்று ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், போதைப்பொருள்கள் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடனான பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பாலசுப்ரமணியம், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி மற்றும் காவல்துறையினா், ஆசிரியா்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.