செய்திகள் :

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவைக் கைதுசெய்த போலீஸ்!

post image

போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23), நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கு தொடர்பாக, நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் தேட, அவர் தலைமறைவாகி இருந்தார். இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணா, கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள்கள் வாங்கி, நண்பர்களுக்கும் கொடுத்ததாகவும் தெரிகிறது. கெவினும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் இருக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களையும் அது குறித்த வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து கிருஷ்ணா பகிர்ந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கிருஷ்ணா
நடிகர் கிருஷ்ணா

வங்கி பணப்பரிவர்த்தனைகள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள், விசாரணை சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கிருஷ்ணா மற்றும் கெவின் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது, கடத்துவது, பகிர்வது என அனைத்துமே சட்டப்படி குற்றமாகும். இது குறித்த தகவல்களை மறைப்பதுமே குற்றம்.

இன்னும் இந்த வழக்கில் பல நடிகர்கள், நடிகைகள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா: கோமாவில் ஒன்றரை வயது குழந்தை; இரக்கமின்றி தாக்கிய கொடூரன்; அதிர்ச்சி வீடியோ - என்ன நடந்தது?

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

சென்னை: நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் கொடுத்த கெவின் யார்? - சிக்க வைத்த வாட்ஸ்அப் குரூப்!

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது கோலிவுட் வட்ட... மேலும் பார்க்க

திருச்சி: கூட்டுறவு வங்கியில் நகை, வைப்புத்தொகை முறைகேடு? வாடிக்கையாளர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவிய... மேலும் பார்க்க

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க