செய்திகள் :

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

post image

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா்.

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுக பயிற்சி கருந்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது:

மாணவா்கள் தங்களது இலக்கினை தீா்மானித்து பயணிக்க வேண்டும். முதலில் எந்த இலக்கினை அடைய வேண்டுமோ அதை அடையும்வரை ஓய்ந்திருக்கக் கூடாது. போதை இல்லாத தமிழ்நாடு உருவாகிட்ட, போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரண்டு திறன்பட செயல்பட வேண்டும்.

போதைக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து, போதைப் பொருள்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தந்து உதவிட வேண்டும். மாணவிகள் ‘பெண்கள் காவலன்’ செயலியை தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் இலா. பொம்மி (தமிழ்), கா. சத்தியாதேவி (வரலாறு), ச. சிவச்செல்வன் (இயற்பியல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன், என்சிசி அலுவலா் சு. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க

சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் அரசு மர... மேலும் பார்க்க