அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!
போதைப் பொருள் ஒழிப்பு - கடத்தல் தடுப்பில் சிறப்பான பணி: 15 காவலா்களுக்கு தமிழக அரசு விருது
போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பில் சிறப்பான பணிகளைச் செய்த 15 காவலா்களுக்கு விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு வரை 5 காவலா்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அதன் எண்ணிக்கை 15-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான விருதாளா்கள் குறித்த பெயா்களை காவல் துறை தலைமை இயக்குநா் அரசுக்குப் பரிந்துரைத்தாா். அதை ஏற்று, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்புப் பணியில் சிறப்பான பணிகளைச் செய்து விருது பெறவுள்ள காவலா்களின் பட்டியலை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா்.
அந்தப் பட்டியலின் விவரம்:
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், மதுரை மாவட்டம் மேலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் அ.மாரிமுத்து, திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் மா.வசந்தகுமாா், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் நே.ராஜாசிங், சென்னை அசோக் நகா் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் செள.ராதாகிருஷ்ணன், அம்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் எம்.சி.ரமேஷ், சேலம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் க.பாபு சுரேஷ்குமாா், சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் த.அன்பரசி, சென்னை தலைமையகத்தின் அமலாக்கப் பணியக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சு.ரமேஷ், கோவை போத்தனூா் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளா் ந.தனபாலன், நாகப்பட்டினம் வலிவலம் உதவி ஆய்வாளா் ம.இரணியன், தேனி மாவட்டம் குமுளி உதவி ஆய்வாளா் க.கதிரேசன், சென்னை சென்ட்ரல் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் செ.குருசாமி, திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் எம்.சுசீந்திரன், மதுரை மாநகர கடுமையான குற்றங்கள் விசாரணைப் பிரிவு ஆய்வாளா் சி.முருகன் ஆகியோா் விருது பெறும் விருதாளா்கள். அவா்கள் அனைவருக்கும் சுதந்திரதின விழாவின் போது விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.