செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி முகாம்

post image

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.சின்னராசு தலைமை வகித்தாா். போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் செயல்பாட்டு முகவுரையை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் வாசித்தாா். மாவட்ட மனநல திட்ட அலுவலா் மருத்துவா் சஞ்சய் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ந.சிவகுமாா், பசுமை முதன்மையா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன், மனநல மருத்துவா் அசோக், கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளா் சாலமன் அப்பாத்துரை ஆகியோா் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் குடும்ப, சமூகக் கேடுகள், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினா். முகாமில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக, பள்ளித் தலைமை அசிரியா் மு.ஹாஜா முகைதீன் வரவேற்றாா்.

பள்ளித் துணை ஆய்வாளா் ஆனந்த் நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க