செய்திகள் :

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்!

post image

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் (வயது 54), கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் சுமார் 3,30,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெக்கில் தனக்கு வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை அவருக்கு சொந்தமான உணவகத்தில் தனது உறவினரான மரினோ சோட்டிரோபோலோஸ் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் இதன் மூலம் அந்த போதைப் பொருளானது கடத்தப்பட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் லீக்: பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்..! காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வு!

இதனை, அவர் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் மெக்கில்லின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தலானது அரங்கேறியிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றங்களிலிருந்து அவரை விடுதலை செய்தது. இருப்பினும், இந்தக் கடத்தலில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அந்தக் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை அவருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் ஆஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க