செய்திகள் :

போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?

post image

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஐஷ்பாக் விளையாட்டரங்கம் அருகே கட்டப்பட்டுள்ள ரயில் மேம்பாலம், நகரின் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், அதற்கு சவாலாக, ஆந்திரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் புகைப்படம் வரலாகியிருக்கிறது.

கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கூகுள் மேப்பில் இருந்த ஆந்திர மாநில மேம்பாலத்தின் வரைபடம் பகிரப்பட்டுள்ளது.

போபாலில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் அந்த ரயில் பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே, 90 டிகிரி வளைவு இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். கடந்த வாரம் முழுக்க இந்த மேம்பாலம் பேசுபொருளாகியிருந்த நிலையில், ஆந்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் சுற்றுச் சுவர் போல மூன்று கூர்மையான திருப்பங்களைப் பார்க்கும்போது பலருக்கும் கண்கள் சற்று விரியத்தான் செய்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் 90 டிகிரி கோணத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வாகன ஓட்டிகளின் உயிர்களை காவு வாங்கக் காத்திருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் ஆந்திரத்தில் இப்படி ஒரு மோசமான பொறியியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் வாசுதேவபுரம் அருகே மாநில நெடுஞ்சாலை 57-ல்தான் இந்த மேம்பாலம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் யாருக்கானவை? கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொது பயன்பா... மேலும் பார்க்க

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவ... மேலும் பார்க்க

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க