செய்திகள் :

போராட்டக்காரா்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்: வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பு

post image

கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.

இது குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறியதாவது:

போராட்டக்காரா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரின் உள்துறை அமைச்சா் அசாதுஸ்மான் கான் கமால், அப்போது காவல்துறை தலைவராக இருந்த சௌத்ரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், மனித குலத்துக்கு எதிராக குற்றமிழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவா்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு எதிா்த் தரப்பு வழக்குரைஞா்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி முகமது குலாம் மஸூம்தா் தலைமையிலான சா்வதேச குற்றவியல் நீதிபதிகள் அமா்வு நிராகரித்தது. அத்துடன், அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறினா்.

வங்கதேச சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் முன்னாள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மாணவா்கள் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க