செய்திகள் :

போராட்டம் இல்லையென்றால் மாற்றங்கள் இல்லை: சீமான்!

post image

போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைபடுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதேபோல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும், உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த பல ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள், நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலைவாய்ப்பு இல்லை. நதிநீா் உரிமை பெற முடியவில்லை, இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை, வேளாண்மை செய்ய முடியவில்லை,வேலை செய்ய முடியவில்லை.

இவற்றையெல்லாம் மீட்டெடுக்க அதிகார வலிமை வேண்டும் என்று பேசிபேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக நாம் தமிழா் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுதான் புரட்சி. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது.

மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம். அதற்கு மாற்று நாம் தமிழா் கட்சி என்று முன் வைக்கிறோம். ஒவ்வொருவரின் மனதிலும் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை வந்து விட்டால் மாற்றம் தானாக வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தந்துள்ளது என்றாா்.

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க