செய்திகள் :

போராட்ட அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத் திருத்தம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காண்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆண்டு நவ. 7-இல் சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினா் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதியில்லை என்பதால், எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில், வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும்படி போலீஸாா் அறிவுறுத்தினா்.

அதன்படி நவ. 7-இல் ராஜரத்தினம் அரங்கத்திலிருந்து நேரடியாகச் சென்று, ஆளுநரை சந்தித்து மனு அளிப்பது என அறிவித்த நிலையில், முந்தைய நாளான நவ. 6-இல் பேரணிக்கு அனுமதி மறுத்து, போலீஸாா் உத்தரவு பிறப்பித்தனா். இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலீஸாரின் செயலால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா். அதேபோன்று விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி இழப்பீடு கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க